என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய மார்பகம் குறித்து முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பது அவசியம்



என்ன அளவு? என்ன நிறம்? என்ன வடிவம்? என ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய மார்பகம் குறித்து முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பது அவசியம். இதோடு முன் கூட்டியே கண்டறியும் பரிசோதனைகளையும் மேற்கொண்டால் எந்தவொரு நோயையும் ஆரம்ப கட்டத்திலேயே எளிதில் கண்டுபிடித்து குணப்படுத்திவிட முடியும்.ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கிற்குப் பிறகு உங்கள் மார்பகத்தைக் கண்ணாடி முன் நின்று நீங்களே பரிசோதித்துப் பார்த்துக் கொள்வது நல்லது.சிலருக்கு மாதவிலக்கு நாட்களுக்கு முன்பாக மார்பகம் இறுகிய நிலையை அடையக்கூடும்.இதனால் அவர்கள் ஒருவித அசௌகர்யத்தையும், கனத்தையும் உணரக்கூடும்.இந்த நேரத்தில் சுயபரிசோதனை மேற்கொண்டால் தேவையற்ற பயத்தையும்,பதற்றத்தையும் மட்டுமே அவை உருவாக்கும்.எனவே மாதவிலக்கு முடிந்தபிறகு சோதித்துப் பார்ப்பதே சாலச்சிறந்தது.
கண்ணாடி முன்னால் நின்று கைகளை உயர்த்தி மார்பகம் எப்படி அசைகிறது என்று பாருங்கள். கைகளை பக்கவாட்டில் நகர்த்தி தலையை உயர்த்தி இந்த சோதனையை செய்து பாருங்கள். உங்களுக்கு இயல்பான நிலை எது என்பதைத் தெரிந்து கொள்ள இது மிகவும் அவசியம். அதன் பிறகு இந்த அசைவுகளின் போது ஏதாவது அசௌகரியமாகத் தோன்றினால் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். மார்பகத்தின் வடிவத்தில் என்ன மாற்றம் தென்படுகிறது?எங்காவது வீக்கம் தெரிகிறதா? 
தோலில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா?மார்புக்காம்பு உள்நோக்கி இழுத்துக் கொண்டது போலத் தெரிகிறதா என்பனவற்றையும் தெரிந்துகொள்ள பழகிக் கொள்ளுங்கள்.
உங்கள் மார்பகத்தை நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்ப்து மிகவும் முக்கியமானதுதான்.சிலருக்கு மாதவிலக்குக்கு முந்தைய நாட்களில் மார்பகங்கள் சற்று வலிப்பது போலத் தோன்றும். அதற்குப் பிறகு வலி குறைந்து பிறகு இல்லாமல் போய் விடும். மாதவிலக்கு சுழற்சியில் அவை எப்படியான மாற்றத்தை அடைகின்றன என்பதையும் நன்கு புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் உங்கள் மார்பகத்தை சுயபரிசோதனை செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.
1. மார்பகத்தின் வெளிச்சுற்று அல்லது வடிவத்தில் ஏதேனும் புதிதாகத் தென்படுகிறதா? கைகளை அசைக்கும் போது மடிப்புகள் அல்லது குழிவு போல் ஏதேனும் தென்படுகிறதா?
2. இரண்டு மார்பகங்களில் ஏதேனும் ஒன்றில் வலியோ, அசௌகரியமோதென்படுகிறதா? அந்த நிலை சில வாரங்களுக்குத் தொடர்ந்து நீடிக்கிறதா? 
3. ஒரு மார்பகத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இல்லாத ஒரு அம்சம் இன்னொரு மார்பில் தென்படுகிறதா?
4. மார்புக் காம்பில் இருந்து ஏதாவது திரவக்கசிவு ஏற்படுகிறதா?
5. மார்புக் காம்பில் இருந்து ரத்தக் கசிவு அல்லது அதைச் சுற்றிய பகுதியில் ஏதேனும் சிவந்து தடித்து காணப்படுகிறதா?
6. மார்பு நுனியின் அமைப்பில் ஏதேனும் மாற்றம் தென்படுகிறதா? உள்பக்கமாக குழிந்தது போலவோ, வேறு திசையில் இழுத்துக் கொண்டு இருப்பது போலவோ தென்படுகிறதா?
இயல்புக்கு மாறாக புதிதாக எந்தவொரு மாற்றம் தென்பட்டாலும் அதனை உடனே மருத்துவரிடம் சொல்லி ஆலோசனை பெறுவது நல்லது. 
மாதவிலக்கு தொடர்பான அறிவுரைகளைப் போலவே மார்பகம் தொடர்பான இத்தகைய அறிவுரைகளையும் பெண் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுவது மிகவும் அவசியம்.பெண்கள் தாங்களே மாதாந்திர பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதனால் வாழ்வின் பல்வேறு காலகட்டத்தில் மார்பில் ஏற்படும் மாற்றங்களை நன்கு புரிந்து கொண்டு பயமில்லாமல் வாழமுடியும்.

கருத்துகள் இல்லை: