என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

கறுப்பழகி சிவப்பழகியாக மாற வேண்டுமா?

கறுப்பானாலும் உங்களிலும் ஒரு அழகு இருக்கிறது ஆனால் அது உங்களுக்கு தெரிவதில்லை. ஏதோ சிவப்பழகு தான் அழகு எண்டு நினைக்கிறிர்கள். அதனால்தான் உங்களுக்காக இதோ........
கறுப்பான பெண்கள் நிறமாக மாற வீட்டிலிருந்தவாறு செய்து கொள்ளக்கூடிய சிகிச்சைகள் சில......


பழ பேஷியல்

முகத்தை முதலில் காய்ச்சாத பாலால் துடைக்கவும். சிறிதளவு வெள்ளரிச்சாறு அல்லது ஸ்ரோபெரி சாறு எடுத்து சில நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து, அதில் பஞ்சை நனைத்து முகத்தில் ஒற்றியெடுக்கவும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை ஓரேஞ்ச் சாற்றில் நனைத்துக் கொள்ளவும். கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள், தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும்.




காய்கறி பேஷியல்


முதலில் சொன்ன மாதிரி பச்சைப் பாலால் முகத்தைத் துடைக்கவும். முட்டைக் கோஸை பச்சையாக மசித்து வைத்துக் கொள்ளவும். இது தவிர அதில் கொஞ்சம் சாறும் எடுத்து வைத்துக் கொள்ளவும். முட்டைக் கோஸ் மசித்ததைக் கொண்டு முகத்துக்கு மசாஜ் கொடுக்கவும். இடையிடையே முட்டைக்கோஸ் சாறை விரல்களில் தொட்டுக் கொள்ளவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து ஈரமான பஞ்சால் முகத்தைத் துடைத்து விட்டு, முட்டைக்கோஸ் விழுது, பால் மற்றும் தேன் கலந்த பேக் போடவும். மேற்சொன்ன இரண்டு பேஷியல்களையும் பதினைந்து நாட்கள் இடைவெளியில் செய்து கொள்ளலாம். பருக்கள் இல்லாதவர்கள் என்றால் பத்து நாட்களுக்கொரு முறையும் செய்து கொள்ளலாம்.

சிறிதளவு தேன், சிறிதளவு பாலேடு, சிறிது வெள்ளரிச்சாறு, கொஞ்சம் கடலை மா எல்லாவற்றையும் நன்றாகக் குழைத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு பிறகு கழுவலாம். நன்கு மசித்த பழுத்த வாழைப் பழத்துடன் தேன், ஆரஞ்சு சாறு, பயத்தம் மா கலந்து முகத்தில் தடவி, ஊற விட்டுக் கழுவி வர, நிறம் கூடுவதைக் காணலாம். குங்குமப் பூ சாப்பிட்டால் நிறம் கூடுமா என்பது பலரது சந்தேகம். அதை அப்படியே பாலில் கலந்து குடிப்பது பலன் தராது. சூடான பாலில் குங்குமப் பூவைப் போட்டு கால் மணி நேரம் அப்படியே ஊறவிட வேண்டும். அது வெதுவெதுப்பாக மாறி, மஞ்சள் நிறத்துக்கு வரும் போது குடிப்பது தான் பலன் தரும்.

ஆயுர்வேதக் கடைகளில் சுத்தமான குங்குமாதி தைலம் கிடைக்கும். அதை வாங்கி கொஞ்சம் பாலுடன் கலந்து வாரம் ஒரு முறை முகத்துக்கு மசாஜ் செய்து வந்தால் நிறம் நிச்சயம் கூடும். மசாஜுக்குப் பிறகு அரைத்த சந்தனத்தில் பால் கலந்து பேக் போட வேண்டியது முக்கியம். வெய்யிலில் செல்கிறபோது சன் ஸ்கிரீன் உபயோகிப்பது, டூ வீலரில் செல்கிற போது கைகளுக்கு கிளவுஸ் அணிவது, நிறைய பச்சைக் காய்கறிகள், பழங்கள், இளநீர், பால், தயிர் சாப்பிடுவது போன்றவையும் நிறத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

எனி நீங்களும் சிவப்பழகி தான்...... கறுப்பகிட்டமே என்ற தழ்வு மனப்பான்மை இனி உங்களுக்கு வேண்டாம்.

வாரத்துக்கு 6 கிளாஸ்' ஒயின்,பீர் கலந்து குடித்தால் !!!


பெங்களூரைச் சேர்ந்த பிரபல பெண் டாக்டர் அஞ்சலி முகர்ஜி. இவர் பெண்களின் அழகு தொடர்பாக பலவித ஆராய்ச்சிகள் செய்துள்ளார்.

அந்த வகையில் `ஒல்லிக்குச்சி உடம்புக்காரி'களுக்கு `செம' டிப்ஸ் தந்துள்ளார்.

தினமும் ஒரு கிளாசை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சிறிதளவு சிவப்பு ஒயினையும், பீரையும் விட்டு நன்றாக கலக்குங்கள். அப்படியே `ராவா'க உள்ளே தள்ளுங்கள். சற்று நேரம் கிளு, கிளுப்பாக இருக்கத் தான் செய்யும். இதன் பின்னர் நன்றாக படுத்து தூங்குங்கள்.

இவ்வாறு வாரத்திற்கு 6 கிளாஸ் அடித்து வந்தால் எலும்பும், தோலுமாக இருக்கும் பெண்கள் அதாவது திரிஷா மாதிரி இருப்பவர்கள் நமீதா மாதிரி ஆகி விடுவார்களாம்.

நீங்கள் கனவிலும் காணாத அளவிற்கு மார்பகம் மிக அழகாகிவிடுமாம்.

மேற்கண்ட ஒயின், பீர் மிக்சிங் செய்யும்போது உடலில் பாலிபினால் என்றொரு வகை சத்து உருவாகி, போதிய கொழுப்பினை ஏற்படுத்தி பெண்களை அழகாக்கிவிடும் என அந்த பெண் டாக்டர் தெரிவிக்கிறார்.

நக பராமரிப்பு

தரமான
நெயில் பாலிஷ்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். அப்போது தான் நகத்திற்கு
எவ்விதபாதிப்பும் வராது. நெயில் பாலீஷ் வாங்கும் போது உங்கள் நிறத்திற்கு
ஏற்ற கலராக பார்த்து தேர்ந்தெடுங்கள்.

* சிலருக்கு நகம் கடினத்தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு
கஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால்,
நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும். அதே போல், தேங்காய்
எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம்.


* நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், நகங்கள் உறுதியாகும்

அழகு குறிப்புகள் சில..........

நன்கு பழுத்த பப்பாளி விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் நான்கு ஸ்பூன் தேன், சிறிது கிளிசரின் சேர்த்து கலந்து, கண்ணைச் சுற்றியுள்ள பகுதி தவிர மீதி இடங்களில் பற்றுப்போட்டு, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவிவர முகம் பிரகாசிக்கும்.


ü பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்து, அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மையானதாக மாறிவிடும்.


ü ஒரு கப் பப்பாளித் துண்டுகளுடன் சிறிது எலுமிச்சை சாறு, சிறிது சர்க்கரை (சீனி) கலந்து 30 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தேகம் மினுமினுக்க ஆரம்பித்துவிடும்.


ü காலில் பித்த வெடிப்பா? கவலையே வேண்டாம்! பப்பாளி காயின் பாலை எடுத்து அதில் தேய்க்கவும். சில நாட்களிலேயே பாதவெடிப்பு காணாமல் போய்விடும்.


ü மெல்லிடை வேண்டுமா? இதற்கும் பப்பாளி பெஸ்ட் சாய்ஸ்தான்! உடல் எடை குறைய பப்பாளிக்காயினை கூட்டாக செய்து தொடர்ந்து சாப்பிட்டுவர நீங்களும் ஆகலாம் ஸ்லிம்!

கர்ப்ப காலத்திலும் அழகு தேவை

கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் அழகுடன் போராட வேண்டியேற்படும். உடலில் பல மற்றம் ஏற்படுகின்றது. அதை எப்படி சமாளிப்பது என்பதே தெரியாமல் திண்டாடுவோம். நாம் அழகாக இருந்தால் தான் மனம் சந்தோசமாக இருக்கின்றது.... அப்போது தான் குழந்தையும்
ஆரோக்கியமாக வளரும்.

நீங்களும் உங்கள் குழந்தையும் அழகுடன் மிளிர்ந்தால் உங்கள் குடும்பமே ஆரோக்கியத்துடன் இருக்கும். ஆக கர்ப்பகலத்திலும் அழகு தேவை.
இயந்திரங்களின் உதவியின்றி கைகளால் செய்யப்படும் "பேஷியலை' கர்ப்ப காலத்தில் செய்து கொள்வதே சிறந்தது. மேலும் ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் வாழைப் பழம் சம அளவு எடுத்து, கூழ் போன்று அரைத்து கொள்ள வேண்டும். இதை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி, பதினைந்து நிமிடம் கழித்து கழுவினால், முகம் பளிச்சென்று இருக்கும்.

சிலருக்கு கர்ப்ப காலத்தில் முடி உதிருதல் பிரச்னை இருக்கும்.

அதற்கு புரோட்டீன், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து மற்றும் வைட்டமின் "' போன்ற சத்துக்கள் குறைபாடே காரணம். எனவே, கர்ப்ப காலத்தில் இச்சத்துகள் நிறைந்த உணவு பொருட்களை அதிகளவில் சேர்த்து கொண்டால், முடி உதிருதல் குறையும். மேலும், சிசுவும் ஆரோக்கியமுடன் வளரும்.


கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாட்டினால், கை, கால்களில் தேவையில்லாத முடிகளின் வளர்ச்சி அதிகம் இருக்கும். வேப்பங்கொழுந்தை கிள்ளி, அதனுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து, முடி இருக்கும் பகுதிகளில் தடவினால், முடிகள் உதிர்ந்துவிடும். கர்ப்பிணி பெண்கள் பக்க விளைவுகள் எதுவும் இல்லாத, அழகு சிகிச்சை முறைகளை மேற்கொள்வதன் மூலம், கருவில் இருக்கும் சிசுவும் ஆரோக்கியமுடன் வளரும்.

ஹேர்கலரிங் செய்ய போறிங்களா ஒரு நிமிடம்..


இப்பவுள்ள காலத்தில் ஆண்கள் பெண்கள் என்று எல்லோரும் ஹேர் கலரை மாற்றுவது ஃபேஷன் ஆகிவிட்டது।

முன்பெல்லாம் முடியினை கருப்பாய் மாற்ற வழி தேடினோம் இப்ப டிரெஸ்க்கு மெட்சாக கலரை மாற்ற வழி தேடுகிறோம்.

சரியான வழி தெரியாமல் தரமில்லாத ஹேர் கலரிங் செய்வதால் பல பாதிப்புகள் தலைமுடிக்கு மட்டுமல்ல உடலில் பல பகுதிகள் பாதிக்கப்படும்




பொதுவாக அடிக்கடி ஹேர் கலரிங் செய்வதால் தலை பகுதி மற்றும் கழுத்து நெற்றி போன்ற பகுதியில் அரிப்பு, சில இடங்களில் தடிப்பு, முடி அதிகமாக கொட்டுதல் அல்லது முழுமையாக முடியின் கலர் மாறி வெள்ளையாகவோ அல்லது மஞ்சள் கலராகவோ மாறிவிடும்.

அதோடு மட்டுமில்லாமல் முடியினை தொட்டாலே முள் குத்துவது போல் இருக்கும்.

இதனை தடுக்க கெமிக்கல் இல்லாத கலரிங் செய்வது தான் சரியான தேர்வு.

நாமே ஹேர் கலரிங் செய்வதை விட நல்ல திறமையான ப்யூட்டி பார்லரில் செய்வது நலம்.

கெமிக்கல் ஹேர் கலரிங்க செய்யதவுடனே ஹென்னா பேக் தலைக்கு போடக்கூடாது

பொடுகே என்னருகில் வராதே...

இன்று முக்கால் வாசி ஆண்களும் பெண்களும் சந்திக்கும் மிக பெரிய பிரச்சனை பொடுகுத் தொல்லைதான்.கூந்தலின் மீது அதிக கவணம் எடுத்துக்கொண்டால் இந்த பிரச்சனையிலை ஆரம்பத்திலே தடுத்துவிடலாம்.கவனிக்காமல் விட்டால் கூந்தலில் ஒருவித வாடை வரும், அரிப்பு, புண், எரிச்சல், கூந்தல் உதிர்வுகள் ஏற்படும்.


பொடுகின் ஆரம்ப நிலையில் இருந்து பார்ப்போம்.பொடுகினை இரண்டு வகையாக பிரிக்கலாம் அதில் ஒன்று கூந்தல் வறண்டு செதில் செதிலாக வெள்ளையாக இருப்பதது.இன்னென்று எண்ணெய் பசையுடன் இருப்பது.


முதல் வகையினை கவனிக்காமல் விட்டால் அது சோரியாஸிஸ் போன்ற சரும நேய்கள் வரக்கூடும். இதன் மூலம் நெற்றியில் சின்ன சின்ன பருக்கள் வந்து உங்கள் முக அழகையும் கொடுக்கும்.


இரண்டாம் வகையின் மூலம் உங்கள் கூந்தல் அதிகமாக உதிர்வு ஏற்படும். தலையில் ஒரு வித துர்நாற்றம் வரும். இதன் மூலம் முகத்தில் எண்ணெய் பசை அதிகமாக தெரிந்து அழகை கெடுக்கும்.
பொடுகுவர காரணங்கள்:

பொடுகுவர முக்கிய காரனம் ஹார்மோன் கோளாறுகள், கூந்தலில் சரியில்லாத பராமறிப்பு, தவறான உணவு பழக்கம், டென்ஷன்,பரம்பரைத்தன்மை தான் இதற்க்கு காரணங்கள்.



பொடுகு வந்தவர்கள் கவணிக்கவும்:

வாரம் இரண்டு முறை தலைக்கு நல்ல ஷம்ப்பு அலது சியக்காய் போட்டு குளிக்கவும்.

பொடுகு வந்த பின்பு தலையில் மிகுந்த அரிப்புகள் இருக்கும் அதனை விரல் நகம் வைத்து அதிகமாக சுரண்டக் கூடாது.

கண்டகண்ட க்ரீம்களை தலைக்கு தேய்க்கக் கூடாது.

அதிகமாக தண்ணீர் குடிக்கவும். எண்ணெய் அதிகம் உள்ள உணவு பண்டங்களை தவிர்க்கவும்.

முக்கியமாக டென்ஷன் இல்லாமல் இருக்கனும்.

தலையணை உறைகள் மற்றும் தலையணையினை சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.

சீப்பு, தலை துடைக்கும் டவல், ஹேர் ஹிளிப் தலைக்கு பயன்படுத்தும் அனைத்துமே தனியாக பயன்படுத்தவும்.

சீப்பை 3 நாளுக்கு ஒரு முறை சூடு தண்ணீரில் போட்டு அலசிய பின்பு பயன்படுத்தவும்.



இதனை தடுக்க சில வழிகள்:

குளிக்கும் முன்பு நன்றாக தலையில் சிறிது வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயினை தலையின் வேரில் பஞ்சினை வைத்து தேய்து நன்றாக ஊறிய பின்பு குளிக்கவும்.

வாரம் ஒரு முறை ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கவும்..
எலூமிச்சை சாறு, அல்லது முட்டையின் வெள்ளை கரு அல்லது வெள்ளை முள்ளங்கி சாறு தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.


கூந்தல் பவுடர்:

4ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 4 ஸ்பூன் நல்ல தரமான சியக்காய் பவுடர், 2 கப் மருதாணி பவுடர், 1 எலுமிச்சை பழ தோல், 1 ஆரஞ்ப்பழத்தோல், 2ஸ்பூன் வேப்பிலை பொடி அனைத்தையும் ஒன்றாக கலந்து 1கப் தயிருடன் கலந்து தலைக்கு வாரம் ஒரு முறை தேய்த்துக் குளித்தால் பொடுகு போய்விடும்.

பெண்கள் அறையில் இருக்க வேண்டிய பொருட்கள்

பெண்கள் அறையில் இருக்க வேண்டிய பொருட்கள்




மேக்கப் போடும் பெண்கள் அறையில் இருக்க வேண்டிய பொருட்கள்

பெண்கள் முகத்துக்கு பெயிண்ட் அடிக்க சாரி அழகு படுத்த மிக முக்கியமான பொருள் பிரெஷ் தான்.. எல்லா விதமான அளவிலும் பிரெஷ் இருப்பது நல்லது..

முகத்துக்கு:
ஸ்கின் டோனர்
ஃபவுண்டேஷன் கீரிம் -
காம்பெக்ட்
மாயிச்சர்
கிளிசரின்
ரோஸ் பவுடர்
நார்மல் பவுடர்
சைனிங் பவுடர்

கண்களுக்கு:
மஸ்காரா
ஐ லைனர்
ஐ ஷேடோ
கண் மை
சுருமா
புருவத்துக்கு
ஐப்ரோ பென்சில்
சின்ன பிரெஷ்


உதடுகளுக்கு
வாசலின்
லிப் லைனர்
லிப்ஸ்டிக்
லிப் சைனர்.
லிப் க்லாஸ்

முகத்துக்கு மட்டும் எனக்கு தெரிந்தவரை சொல்லிவிட்டேன். வேறு எதுவும் உங்களுக்கு தெரியுமா?

அப்பறம் எனக்கு வேறு விஷயமும் தெரியும். இந்த மேக்கப் பொருட்கள் சரியாக வாங்கவில்லை என்றாl அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னவென்றும் தெரியும். அதனை உங்களுக்கு மட்டும் நாளை சொல்லுகிறேன்

காலை வெ‌யி‌ல் ந‌ல்லது

காலை வெ‌யி‌ல் ந‌ல்லது குழ‌ந்தைகளை காலை‌யி‌ல் வெ‌ளி‌யி‌ல் கொ‌ண்டு வ‌ந்து ‌சி‌றிது நேர‌ம் வை‌த்‌திரு‌ப்பது ந‌ல்லது. இதனா‌ல் காலைய‌ி‌ல் ‌வீசு‌ம் தூ‌ய்மையான‌க் கா‌ற்று‌ம், இதமான வெ‌யிலு‌ம் உடலு‌க்கு‌க் ‌கிடை‌க்கு‌ம்.
அ‌திகாலை 7 ம‌ணி‌க்கு‌ள் வரு‌ம் வெ‌யி‌லி‌ல் நமது உட‌ல் ப‌ட்டா‌ல், அ‌ந்த சூ‌ரிய ஒ‌ளி‌யி‌ல் இரு‌ந்து வை‌ட்ட‌மி‌ன் டியை தோ‌ல் உ‌ற்ப‌த்‌தி செ‌ய்யு‌ம் ஆ‌ற்ற‌ல் உ‌ள்ளது. எனவே காலை வெ‌யிலை தோ‌லி‌ல் படுமாறு குழ‌ந்தையை வை‌த்‌‌திரு‌ங்க‌ள்.
இ‌ந்த வெ‌யி‌ல் உட‌லி‌ல் பட வே‌ண்டு‌ம் எ‌ன்பத‌ற்காக‌த்தா‌ன் அ‌திகாலை‌யி‌ல் எழு‌ந்‌தி‌ரியு‌ங்க‌ள் எ‌ன்று மு‌ன்னோ‌ர்க‌ள் சொ‌ல்ல‌ி வை‌த்தா‌ர்க‌ள்.
பலரு‌ம் காலை 8 ம‌ணி‌க்கு‌த்தா‌ன் க‌ட்டிலை ‌வி‌ட்டு இற‌ங்குவா‌ர்க‌ள். ஆனா‌ல் உ‌ங்களது குழ‌ந்தையையாவது இ‌ந்த வெ‌ளி‌ச்ச‌த்தை‌ப் பா‌ர்‌க்க ‌விடு‌ங்க‌ள். அதே வாய‌்‌ப்‌பி‌ல் உ‌ங்களு‌க்கு‌ம் வை‌ட்ட‌மி‌ன் டி ‌கிடை‌க்கு‌ம்.
கொ‌ஞ்ச‌ம் வள‌ர்‌ந்த குழ‌ந்தைகளாக இரு‌ந்தா‌ல் மாடி‌யி‌ல் 7 ம‌ணி‌க்கு‌ள் செ‌ன்று ‌சில எ‌ளிய உட‌ற் ப‌யி‌ற்‌சிகளை‌க் க‌ற்று‌க் கொடு‌‌த்து செ‌ய்ய‌‌ச் சொ‌ல்லு‌ங்க‌ள்

அழகுக்கு அழகு சேர்க்க:-

பரு வராமல் தடுக்க:-


முல்தானி மெட்டி + புதினா சேர்த்து பேஸ்ட்டாக்கி பருவின் மேல் தடவி 10
நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் பஞ்சின் மூலம் துடைத்தால் பளிச்சென்று
இருக்கும். இன்பெக்ஸ்னை தடுக்கும்.

முகம் பளிங்குபோல் மின்ன:-

லெமன் ( 1 ஸ்பூன்) + தேன் ( 1 ஸ்பூன்) சேர்த்து முகத்தில் தடவி 10 நிமிடம்
கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். முகம் சூப்பரா இருக்கும்.

தலைமுடி‌க்கு நா‌ம்தா‌ன் எ‌தி‌ரி

தலைமுடி கொ‌ட்டு‌‌கிறது, தலை‌யி‌ல் அ‌திகமான பொடுகு என கவலை‌ப்படு‌ம் பெ‌ண்களே இ‌ல்லை. கவலை‌ப்ப‌ட்டு ப‌ட்டு அ‌திகமாக முடி கொ‌ட்டுவத‌ற்கு வ‌ழிவகு‌ப்பா‌ர்களே‌த் த‌விர, அத‌ற்கு எ‌ன்ன செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌க்க மா‌ட்டா‌ர்க‌ள்.

நா‌ம் செ‌ய்வதெ‌ல்லா‌ம் கூ‌ந்தலு‌க்கு எ‌திரான ‌விஷய‌ங்க‌ள். அ‌ப்படி இரு‌க்க கூ‌ந்த‌ல் ‌மீது நா‌ம் ப‌ழிபோடுவோ‌ம்.

முத‌லி‌ல் உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமின்மைக்குக் காரணம் சத்துக்குறைவு தான். சுவையானது என்று நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகளில் போதிய ஊட்டச்சத்துகள் இல்லாததால், ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடர்பான பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன.

குறிப்பிட்ட கால்சியம், வைட்டமின், தாது உப்புகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டாலும் முடியானது உலர்ந்த தன்மையை அடையலாம். பிற நோய்த் தொற்றுகள் ஏற்பட்டாலும் முடி உலர்ந்து, கொட்டிப்போகும். எனவே தலைமுடி கொட்டுவதற்கு அடிப்படை பிரச்சினை என்ன? என்பதைக் கண்டறிந்து, அதன்படி சிகிச்சை பெற்றால் பலன் கிடைக்கும்.

அதிகமாக முடி கொட்டுபவர்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது. ஏனெனில் நமது உடலில் சுரந்து கொண்டிருக்கும் ஹார்மோன்கள் சில சமயங்களில் சுரக்காது நின்றுபோனாலும் முடி கொட்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். புரதம் நிறைந்த பருப்பு, கீரை வகைகள், கேரட், பீட்ரூட், கறிவேப்பிலை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, பால், எலும்பு சூப் போன்ற சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே ஹார்மோன் சுரப்பிகளை சரிசெய்ய முடியும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.

இதுவரை நா‌ம் பா‌ர்‌த்தது நமது ஆரோ‌க்‌கிய‌ம் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டது. இ‌னி கூ‌ந்தலு‌க்கு நா‌ம் செ‌ய்யு‌ம் தொ‌ந்தரவுக‌ள் எ‌ன்னவெ‌ன்பதை‌ப் பா‌ர்‌க்கலா‌ம்.

குளிப்பதற்கு முன் கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்‌றினா‌ல் கு‌ளி‌த்த ‌பிறகு கூ‌ந்த‌லி‌ல் அ‌திக ‌சி‌க்கு ஏ‌ற்படாம‌ல் இரு‌க்கு‌ம். கண்ட கண்ட ஷாம்புகளை உபயோகித்துப் பார்க்கும் ஆய்வுக்கூடமல்ல தலை. எனவே, தலைமுடிக்கு ஏற்ற ஷாம்புகளையே பயன்படுத்துங்கள். அதிக அளவில் ஷாம்பு பயன்படுத்துவதையும் தவிர்க்கவும். அதிக நுரை வந்தால்தான் முடி சுத்தமாகும் என்று எண்ண வேண்டாம். அதேபோல் ஷாம்பு தடவிய முடியை நன்றாக ‌நிறைய த‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டு அலசவும்.

தலைக்கு குளிக்கும் ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் உபயோகிப்பது அவசியமான ஒன்று. கண்டிஷனரை முடியின் வேர்களை விட நுனிப்பாகத்தில் தடவுவது நல்லது. கண்டிஷனர் தடவிய பிறகும் முடியை நன்றாக அலச வேண்டும். தலைமுடியை ஷாம்பு போட்டுக் கழுவிய பிறகு, ஒரு டீஸ்பூன் வினிகரை ஒரு கப் நீரில் கலக்கி தலைமுடியைக் கழுவுங்கள். உங்கள் தலைமுடி மிருதுவாகவும், பட்டு போன்று பளபளப்பாகவும் இருக்கும்.

மருதாணியை தலையில் தேய்த்து ஊறவைத்த பின் ஷாம்பூ போடுவது தவறு. மருதாணி மிகச்சிறந்த கண்டிஷனர். எனவே மருதாணிக்குப் பிறகு ஷாம்பூ பயன்படுத்துவது நல்லதல்ல. ஆகவே, முதல்நாளே ஷாம்பூ போட்டு குளித்து முடியை நன்கு காயவைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் மருதாணி தேய்த்து ஊறவைத்து வெறுமனே அலசி விடலாம்.

குளித்த பிறகு ஈரத்துடன் முடியை சீவ வேண்டாம். ஈரமான கூந்தலை வேகமாகத் துவட்டுவதை தவிருங்கள். அதற்குப் பதிலாக உங்கள் கூந்தலை 5 நிமிடம் டவலில் சுற்றி வையுங்கள். ஹேர் ட்ரையரை, முடியின் நுனிப்பாகத்தைவிட வேர்ப்பாகத்தில் நன்றாகக் காட்டுங்கள். நுனிகளில் காட்டுவதால் முடி உலர்ந்து உடையக்கூடும். ஹேர் ட்ரையரை அடிக்கடி பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளவும். அப்படி பயன்படுத்தும்போது ஹேர் ட்ரையரை கீழ் நோக்கி பிடிக்கவும். அதேபோன்று ஒரே இடத்தில் அதிக நேரம் காட்டுவதையும் தவிர்க்கவும். உலர்ந்த கூந்தல் கொண்டவர்கள் அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டாம்.

உங்கள் தலைமுடியைப் பராமரிப்பதில் சீப்புக்கும் முக்கியப் பங்குண்டு. தலை‌க்கு கு‌ளி‌த்தது‌ம் உடனடியாக உ‌ங்க‌ள் ‌சீ‌ப்புகளையு‌ம் ந‌ன்கு கழுவுவது ந‌ல்லது. தலைமுடியை சீவும்போது அகலமான பற்களைக் கொண்ட சீப்பு மூலம் சிக்கை அகற்றவும். தலைக்கு குளித்தால் முடியை சீப்பு கொண்டு சிக்கு எடுப்பதை விட, கைகளால் முதலில் சிக்கு நீக்கிவிட்டு பின்னர் சீப்பைப் பயன்படுத்துவது நல்லது.

சுருட்டை முடி உள்ளவர்கள் முடியை ந‌ல்ல முறை‌யி‌ல் பராம‌ரி‌த்தா‌ல் அழ‌கிய கூ‌ந்தலை‌ப் பெறலா‌ம். பெரு‌ம்பாலு‌ம் சீப்பு உபயோகிப்பதைத் தவிர்க்கவும். சீப்பு உபயோகிக்கும்போது நீங்கள் விரும்பும் வகையில் முடியை அழகுபடுத்த முடியாது. நீங்கள் பயன்படுத்தும் சீப்புகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்றாகக் கழுவுங்கள். அதில் உள்ள அழுக்கு உங்கள் முடியின் பளபளப்பை மங்கச் செய்துவிடும்.

உங்கள் தலைமுடியை நன்றாக மசாஜ் செய்யுங்கள். கைகளால் முடியை அழுத்தமாகத் தேய்ப்பதற்குப் பெயர் மசாஜ் அல்ல. விரல் நுனிகளால் தலைமுடியை மெதுவாக தேய்க்கவும். இதனால் தலையில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், தலைமுடி நீளமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் வளரும். எனவே வாரந்தோறும் எண்ணை தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.

பல‌ரு‌ம் தலை‌‌க்கு எ‌ண்ணெ‌ய் வை‌க்கு‌ம் பழ‌க்கமே இ‌ல்லாம‌ல் இரு‌க்‌கி‌ன்றன‌ர். அதனா‌ல் தலை‌க்கு‌ம் பா‌தி‌ப்பு, அவ‌ர்களது உட‌ல்‌நிலை‌க்கு‌ம் பா‌தி‌ப்பு ஏ‌ற்படு‌கிறது. எனவே, வார‌த்‌தி‌ல் ஒரு முறையாவது தலை‌க்கு தே‌‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் வை‌‌ப்பதை பழ‌க்கமா‌க்‌கி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். தலை முடியையு‌ம், சரும‌த்தையு‌ம் பாதுகா‌ப்போ‌ம்.

செக்ஸ் உறவால் எடை கூடுமா?

Does regular sex make women fat?

செக்ஸ் உறவால் எடை கூடுமா?


செக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு சத்து சேரும், மார்பகங்கள், இடுப்புகள் பெருத்து விடும் என்று கூறப்படுவது சுத்தமான மூட நம்பிக்கைதான் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள்.

ஒரு பெண் ரெகுலராக செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டால், அவரது உடல் பெருத்து விடும். மார்புகள் பெரிதாகி விடும், இடுப்புகள் பெருத்து விடும் என்ற நம்பிக்கை பெண்களிடையே உள்ளது.

ஆனால் இதெல்லாம் ஒரு விதமான மூட நம்பிக்கைதான் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள்.

அதேசமயம், செக்ஸ் உறவை வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு மார்புகள், இடுப்புகள் பெருப்பது உண்மைதான். ஆனால் இதற்கும், செக்ஸ் உறவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை.

அதேபோல கல்யாணத்திற்குப் பின்னர் ஆண்களும், பெண்களும் குண்டாகி விடுகிறார்கள். இப்படிக் குண்டாவதற்கும், செக்ஸ் உறவுக்கும் கூட சம்பந்தம் இல்லை.

செக்ஸ் காரணமாக உடல் பெருக்கம் ஏற்படுவதில்லை. செக்ஸ் உறவின்போது ஏற்படும் திருப்தி, அதனால் ஏற்படும் உடல் பூரிப்பு, மன ரீதியான நிம்மதி, கல்யாணம்தான் ஆகி விட்டதே என்ற ரிலாக்ஸ் மனப்பான்மை, அதுவரை கடைப்பிடித்து வந்த உணவு, உடற்பயிற்சிக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை தளரும்போது இப்படி உடல் பெருக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

சிங்கிளாக இருப்பவர்களை விட கல்யாணம் செய்து கொண்டவர்கள் மற்றும் செக்ஸ் உறவில் ஈடுபடுபவர்கள் கூடுதலாக சாப்பிடுவார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே உடல் பெருக்கத்திற்கு இதுவும் கூட ஒரு காரணமாக அமைகிறது.

கல்யாணத்திற்குப் பிறகும், செக்ஸ் உறவைத் தொடங்கிய பிறகும் உடல் பருமன் அதிகரிக்கக் கூடாது என யாராவது விரும்பினால், நிச்சயம் அவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சிகளையும், உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தாக வேண்டும். அப்போதுதான் பருமனாவதைக் குறைக்க முடியும் என்கிறார்கள் டாக்டர்கள்.

பட்டுக் கூந்தலை பெற வேண்டுமா?

பட்டுக்கூந்தலைபெறவேண்டுமா?

விளம்பரங்களில் வருவது போன்ற பட்டுக் கூந்தலை பெற வேண்டுமா.
இதோ சில கூந்தல் பராமரிப்பு குறிப்புகள் ;
ü ஒரு கை அளவு வேப்பிலை எடுத்து நாலு கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடவும்.அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல் தடுக்கலாம் .
ü வினிகரை தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகு தொல்லை குறையும் .
ü சுடு தண்ணீரில் அடிக்கடி தலை குளிப்பதை தவிர்க்கவும் .
ü வெந்தயம் ,வேப்பிலை,கறிவேபிள்ளை ,பாசிபருப்பு ,ஆவாரம்பூ இவை எல்லாவற்றையும் வெயில் காயவைத்து மிஷினில் கொடுத்து மைய அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்பூவுக்கு பதிலாக வாரம் இருமுறை இந்த பவுடரை கூந்தலில் தேய்த்து அலச.. பளபளக்கும் உங்கள் கூந்தல்.
ü ஹேர் டிரையர் (hair dryer)அடிக்கடி உபயோகித்தால் தலை வறண்டு,முடியின் வேர்கள் பழுதடைந்து விடும் .
ü அதிகம் கேமிகல் நிறைந்த ஷாம்பூ மற்றும் ஹேர் கலர் உபயோகிப்பதை தவிர்த்து கொள்ளுவது நல்லது .
ü ஆலிவ் எண்ணையை இரவு படுக்கும் முன் தலையில் தடவி ஊறவிட்டு மறுநாள் காலையில் அலசினால் பேண் தொல்லையில் இருந்து விடுபடலாம் .
ü தலை குளித்த பின்பு ஒரு கப் சுடுதண்ணியில் 1/2 கப் வினிகரை கலந்து தலையை அலசவும் அப்படியே துண்டால் தலையை கட்டி கொள்ளவும் .15 நிமிடத்திற்கு ஊறவைக்கவும் பின்பு தலையை பேண் சீப்பால் சீவினால் தலையில் இருக்கும் ஈறு எல்லாம் வந்து விடும் .இரண்டு வாரம் ஒரு முறை செய்து வந்தால் பேண் தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபடலாம் .
ü முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து ,ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் பளபளக்கும் உங்கள் கூந்தல் .
ü முடி உதிர்வதை தடுக்க அதிகம் ஐயன்,வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும் .
ü இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணையே தடவுவது கிடையாது .அது முற்றிலும் தவறு .தலைக்கு தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் .அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.
ü எண்ணெய் குளியல் மிகவும் அவசியம் .சிறிது நல்ல எண்ணையில் இரண்டு மிளகு ,பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும் . முடி உதிர்வதையும் தடுக்கலாம் .

தேனின் மகத்துவம்

வேலைக்கு செல்லும் பெண்கள் பார்லர் போக நேரம் இல்லை என்றால் தேனின் உதவியுடன் எப்படி பேசியல் பண்ணி கொள்ளுவது என்று கீழே பாருங்கள் .

டோநர் (Toner )

வெள்ளரிக்காய் ஜூஸ் 2 டீஸ்பூன் + தேன் 1 டீஸ்பூன் இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் போர்ஸ் (pores ) எல்லாம் போய் முகம் நல்ல மெதுவாக (soft) இருக்கும் .

ஸ்கரப் (scrub)

ஒட்ஸ்( oats) 2 டீஸ்பூன் + தேன் 2 டீஸ்பூன் + பாதாம் பவுடர் 1 டிஸ்பூன் + தயிர் 2 டிஸ்பூன் நான்கையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 10 நிமடத்திற்கு சர்குலர் மோஷனில் தேய்க்கவும் .பிறகு 10 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி இரண்டு வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத டெட் ஸ்கின் (deadskins) எல்லாம் போய் முகம் பளபளப்பாக இருக்கும் .

ப்ளீச் (Bleach)

தேன் 2டீஸ்பூன் + லேமன் ஜூஸ் 2டீஸ்பூன் இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி 2 வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத தழும்புகள் எல்லாம் போய் முகம் சிவந்து தெரியும் .

க்லன்சர் (cleanser)

1/4 cup தேன் + சோப் (liquid soap) 1 டீஸ்பூன் + கிளசரீன் (glycerin) 1 டீஸ்பூன் மூன்றையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி 2 வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத கரும் புள்ளிகள், முகப்பறு எல்லாம் போய் முகம் பளபளப்பாக இருக்கும் .
தேடுதல் அப்புகுட்டி

மின்னும் அழகை பெற

மின்னும் அழகை பெற

""டயட்''
என்கிற பெயரில் உணவைக் குறைத்துக் கொண்டு உடலை ஸ்லிம்மாக வைத்துக்
கொண்டால் போதுமா? இதனால் சருமத்தில் உள்ள சத்துக்கள் குறைந்து, பொலி
விழந்து, சருமம் வறண்டு காணப்பட்டால் வெளிப் புற தேகத்துக்கு என்னதான்
''மேக்அப்'' செய்தா லும் பயனில்லை. இன்றைக்கு சந்தையில் அழகுக்காகப்
பொருட்கள் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின் றன. இருக்கும் அரைகுறை அறிவை
வைத்துக் கொண்டு அனைத்தையும் வாங்கி, முகத்தில் உடலில் பூசி பின்பு
அவதிப்படுபவர்கள்தான் அநேகம் பேர்.

முதலில் நம் சருமம் எந்த வகையைச் சார்ந் தது என்பதைப் புரிந்துகொள்ள
வேண்டும். வறண்ட சருமமா, எண்ணெய் வழியும் சருமமா என்பதை ஒரு கைதேர்ந்த
அழகுக் கலை நிபுணரிடம் கேட்டறிந்து கொண்டு அழகு பராமரிப்பை மேற்கொண்டால்,
அழகு என்றென்றும் நம் பக்கம்தான். மேலும் நம் உணவில் சமச்சீரான சத்துக்
களடங்கிய டயட் இடம் பெறவேண்டும். ஒருசிலர், வாளிப்பான தேகமும், மினு
மினுப்பான சருமமும் கொண்டு செழிப்பாகக் காட்சியளிப்பார்கள். இதற்கு மிக
முக்கியக் காரணம் சமச்சீரான உணவுப் பழக்கமே.
இப்படிப்பட்ட அழகை நிரந்தரமாகத் தக்கவைத்துக்கொள்ள, தொடர்ந்து பராமரிப்
பும் தேவை. வாரம் ஒருமுறை சருமத்தில் சேரும் அழுக்கை உடல் முழுவதும்
''ஸ்க்ரப்'' செய்து நீக்கி, முகம், கை, கால்களுக்கு மசாஜ் எடுத்துக்
கொண்டால் சருமச் சுருக்கங்களை நீக்கலாம். வறண்ட தேகம் உடையவர்கள்,
பதினைந்து நாட்களுக்கொருமுறை ஏதாவது ''ப்ரூட் பெக்'' எடுத்துக்கொண்டு
''பேஷியல்'' செய்துகொள்வது அவசி யம். இதனால் சருமத்தில் இழந்த தண்ணீர்ச்
சத்துக்கள் மீண்டும் பெறப் படுகின்றன..

தற்பொழுது வேலை பார்ப்பவர் களின் சூழ்நிலையும் 24 மணிநேரமும் குளிரூட்டப்
பட்ட அறைகளில்தான் அமைகிறது. இதனால் உடல் மேலும் வறண்டு போய் விடும்.
இதற்கென்றே ''நேச்சுரல்ஸ் க்ளோ பேஷியல் ஸ்பெஷல் பெக்'' அறிமுகப்படுத்
தியுள்ளது. இதனால் வியர்வையே ஏற்படாமல், நீர்ச்சத்து இழந்து காணப் படும்
சருமத்துக்குப் புத்துணர்ச் சியும், பொலிவும் உடனடியாகக் கிடைக் கிறது..



கூலிங் ஐ மஸாஜ்: .

இரவு, பகல் பாராமல் கம்பியூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு
இச்சிகிச்சை ஒரு வரப்பிரசாதம். கண்களுக்கு உண்டாகும் அதிகக் களைப்பு, சூடு
இவையெல்லாம் அடியோடு நீங்கிவிடும். இதற்கென்றே உருவாக்கப்பட்ட ''ஜெல்
மாஸ்''கை ப்ரீசரில் வைத்து எடுத்து கண்களைச் சுற்றி அணிவித்து சிகிச்சை
தரப்படுகிறது..


மைக்ரோ டெர்மா சிகிச்சை:.

இது முக்கியமாக, சருமத்தில் காணப்படும் இறந்த செல்களை நீக்கி
ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் ஆக்க உதவுகிறது. வெயி லில் அதிகம் சுற்றி,
வேலை பார்த்து சருமம் கறுத்துக் காணப்படுபவர்கள் குறிப்பாக இளை ஞர்கள்
இச்சிகிச்சையை மேற்கொண்டால் இழந்த அழகை மீண்டும் பெறலாம்.
ஐ ஸோன் ட்ரீட்மெண்ட்:.

சிலருக்குக் கண்ணுக்கு அடியில் கருவளை யம் தோன்றி, சருமம் பொலி விழந்து
மங்க லாகக் காணப்படும். அவர்கள் இத்தகைய ஐஸோன் சிகிச்சையைத் தொடர்ந்து
எடுத்துக் கொள்ள கரு வளையம், சுருக்கங்கள் நாளடை வில் மறையும்.
''சருமம் மினுமினுப்புடன் அழகாய் மிளிர்வதற்கு உடலில் கொஞ்சம் கொழுப்புச்
சத்தும் அவசியம்'' என்கிறார்கள் அழக்ககலை நிபணர்கள்

யோகாவின் முக்கிய பயன்கள்

1.நேராக நிற்க உதவுகிறது

2.இரத்த ஓட்டம் சீராகிறது.

3.உடல் எடை குறைகிறது

4.தொடை,கால்,தண்டுவடம் மற்றும் இடுப்புத்தசைகள் வலுவடைகிறது.

5.மார்பு விரிவடைகிறது

6.கழுத்து,பின்பக்க வலிகள் நீங்கும்.

7.இடுப்பு மெலிந்து உடல் அழகிய வடிவம் பெறுகிறது.

8.வயிற்று உறுப்புகள் நன்றாக வேலை செய்கிறது. கழிவுகள் இலக்வாக வெளியேறுகிறது.

9.ஜீரண சக்தி அதிகரிக்கிறது. வாயுக்கோளாறு, உடல் மந்த நிலைகளுக்கு நிவாரணம் கிடைக்கிறது.

10.உடல் பேலன்ஸ்,பலம் கிடைக்கிறது.

11.மூளை குளிர்ச்சி அடைகிறது.

12.ஊளைச்சதை குறையும்
13.முழங்கால்,மூட்டுவலிகள் பிரச்னைகள் தீரும்.

14.கூன் நிமிர்கிறது.

15.சித்தாசனம்,பத்மாசனம் என்ற தியான ஆசனங்களால் மனம் ஒருநிலைப்படுகிறது.

16.சிம்மாசனங்கள் மூலம் வாய்துர்நாற்றம்,திக்குவாய் குணமடைகிறது.

17.தைராய்டு சுரப்பிகள் நன்றாக வேலை செய்கிறது.

18.வயிற்றுப்பகுதி உறுப்புக்கள்,சிறுநீரகங்கள்,அட்ரீனல் சுரப்பிகள்,கருப்பை பிதுக்கம்,புராஸ்டேட் சுரப்பி பிரச்னைகள் சீரடையும்.

19.ஹெர்னியாவை தடுக்கிறது. மாதவிலக்கை கட்டுப்படுத்துகிறது.

20.சுவாசம் சீரடைந்து புத்துணர்ச்சி அடைகிறது.

இப்படி அற்புதமான பயன்களை நமக்கு கொடுக்கும் யோகாசனம் மிகவும் எளிய பயிற்சிகளை உள்ளடக்கியதுதான். அனைவரும் தொடர்ந்து எளிதாக செய்யலாம்

பெண்கள் சிவப்பான அழகைப் பெற

பெண்கள் சிவப்பான அழகைப் பெற கிரீம்களை தேட வேண்டியதில்லை.மருத்துவம் குணம் நிறைந்த குங்குமப்பூ இருந்தாலே போதும்.


குங்குமப்பூவை எப்படி பயன்படுத்தலாம்?

1. குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும்.

2. குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும்.

3. இந்த கலவையை தினமும் பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.

4. இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும். முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.

மேனியை சிவப்பாக எப்படி மாற்றுவது?

எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.

குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும. அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.

பெண்களே! குங்குமப்பூவை பயன்படுத்தி அழகு சிலையாக அசத்த "அதிகாலையின்" வாழ்த்துக்கள்.

தேன்

வேலைக்கு செல்லும் பெண்கள் பார்லர் போக நேரம் இல்லை என்றால் தேனின் உதவியுடன் எப்படி பேசியல் பண்ணி கொள்ளுவது என்று கீழே பாருங்கள் .

டோநர் (Toner )
வெள்ளரிக்காய் ஜூஸ் 2 டீஸ்பூன் + தேன் 1 டீஸ்பூன் இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் போர்ஸ் (pores ) எல்லாம் போய் முகம் நல்ல மெதுவாக (soft) இருக்கும் .

ஸ்கரப் (scrub)

ஒட்ஸ்( oats) 2 டீஸ்பூன் + தேன் 2 டீஸ்பூன் + பாதாம் பவுடர் 1 டிஸ்பூன் + தயிர் 2 டிஸ்பூன் நான்கையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 10 நிமடத்திற்கு சர்குலர் மோஷனில் தேய்க்கவும் .பிறகு 10 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி இரண்டு வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத டெட் ஸ்கின் (deadskins) எல்லாம் போய் முகம் பளபளப்பாக இருக்கும் .

ப்ளீச் (Bleach)
தேன் 2டீஸ்பூன் + லேமன் ஜூஸ் 2டீஸ்பூன் இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி 2 வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத தழும்புகள் எல்லாம் போய் முகம் சிவந்து தெரியும் .

க்லன்சர் (cleanser)
1/4 cup தேன் + சோப் (liquid soap) 1 டீஸ்பூன் + கிளசரீன் (glycerin) 1 டீஸ்பூன் மூன்றையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி 2 வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத கரும் புள்ளிகள், முகப்பறு எல்லாம் போய் முகம் பளபளப்பாக இருக்கும் .

போதுமான தூக்கம்

போதுமான தூக்கம்
மிகவும் `பிசி’யாக இருப்பதற்கு, அதாவது `ஜெட்’ வேக வாழ்க்கைமுறைக்கு பலியாவது தூக்கம்தான். `நான் சில மணி நேரம் தூங்கினால் போதும், தொடர்ந்து வேலையில் ஈடுபட ஆரம்பித்துவிடுவேன்’ என்று பெருமையடித்துக் கொள்ளாதீர்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். சீரான இதயத் துடிப்பு மற்றும் இயல்பான ரத்த அழுத்தத்துக்கு நல்ல தூக்கம் அவசியம். “இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைச் சீராக பராமரப்பிப்பதற்கு உடம்பு அதன் சொந்த ஒழுங்குமுறை அமைப்பைக் கொடிருக்கிறது. போதுமான தூக்கமின்மை, `உயிர்க் கடிகாரத்தை’ பாதிக்கிறது. எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் அதை ஈடுகட்ட முடியாது” என்று இதய மருத்துவர் பகவத் கூறுகிறார்.


நான் படித்தது உங்களுக்கும் பயன் தரும் என்ற நம்பிக்கையில்

அதிகமாக உடற்பயிற்சி செய்வது

உடம்பைக் கச்சிதமாக வைத்திருப்பது நல்லதுதான். ஆனால் அதிகமான உடற்பயிற்சி, நன்மையை விட அதிகம் தீமையே பயக்கும் என்று இதய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். “நம்மை நாமே தடித்துக்கொள்ளும் ஒரு முறையாக உடற்பயிற்சியை வைத்துக் கொள்ளக் கூடாது” என்கிறார் யோகா நிபுணரும், உணவியல் வல்லுநருமான ருஜுதா. “அமைதியான மனநிலையில் நீங்கள் தியானம் செய்யும்போது அது அற்புதமாக பலன் தரும். அதை போல ஓய்வான உடம்புக்குத்தான் உடற்பயிற்சி நல்லது” என்கிறார் ருஜுதா.
நீங்கள் உங்கள் உடம்புக்கு ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய மிக பெரிய தீங்கு, ஏற்கனவே தளர்வாக உள்ள நிலையில் மேலும் கடுமையாக உடற்பயிற்சி செய்வது. “போதுமான தூக்கம் இல்லாதவர்களுக்கு உள்உடலியல் செயல்பாட்டு வேகம் குறைகிறது. எனவே அவர்களால் எடையையும் குறைக்க முடியாது. மாறாக அவர்கள் `பொதுபொது’ என்று ஆகிவிடுவார்கள்” என்று ருஜுதா எச்சரிக்கிறார்.

முக்கியமான விஷயம், வாழ்க்கை, வேலை, உடற்பயிற்சி எல்லாவற்றுக்கு இடையிலும் ஒரு சமநிலையை ஏற்படுத்திக் கொள்வதுதான். எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியமானது உறக்கம். நவீன வாழ்க்கை முறை உங்கள் உடல்நிலையை பாதிக்க அனுமதிக்காதீர்கள்.


நான் படித்தது உங்களுக்கும் உதவும் என்ற நம்பிக்கையில்

இளம் வயதில் முகத்தில் சுருக்கம் இதோ சில குறிப்பு


இளம் வயதிலேயே சில பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் விழுவதைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்குக் காரணம் "பாஸ்ட் புட்’ உணவு வகைகளை இவர்கள் அதிகம் உண்பதுதான் எனக் கூறப்படுகின்றது. இது கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். இளமையிலேயே வயதானவர் போல் தோற்றமளித்தால் யாருக்குத்தான் கவலை வராது? உணவு விடயத்தில் சிறிது கவனம் செலுத்தினால் இவர்களது கவலை மறைந்தே போவது உறுதி. இதோ சில குறிப்புகள் உங்களுக்கு:

காய்கறி பழ வகைகளைத் தவறாமல் சாப்பிடுங்கள். இயற்கையான காய்கறி, பழ வகைகளில் உள்ள விற்றமின்

மற்றும் சத்துக்கள் தோலில் சுருக்கம் ஏற்படுவதைத் தவிர்க்கக் கூடியவை.

வாரத்தில் ஒன்றிரண்டு தடவையாவது ஆரஞ்சு, கரட் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் பளபளப்படையும்.

துவர்ப்பு சுவை இளமைக்குப் பாதுகாப்பு தரும். வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து மசித்து வாரத்தில் 2 அல்லது 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் குளுமையாக இருக்கும். சுருக்கம் எட்டியும் பார்க்காது.

நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள்.

கறிவேப்பிலையிலுள்ள விட்டமின் ஏ இளமையான சருமத்தைத் தக்க வைத்துக் கொள்ள பெரிதும் உதவும். அடிக்கடி துவையல் செய்து சாப்பிடலாமே. முகத்தில் சுருக்கம் என்ற கவலை இனியுமேன்?

எளிய அழகுக் குறிப்புகள்

* சந்தனம், முல்தானிமட்டி கலந்த, "பேஸ் பாக்' உபயோகித்து வர, முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்.

* கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.

* ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.

* பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.

* 2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி மறையும்.* தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும்.

* பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.

* பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்.

* புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

* முழங்கை (முட்டி) கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர மிருதுவாக மாறும்.

* தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து தடவி வந்தால், தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கருமை நிறம் மறையும்.* தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வ தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.

* முட்டை கோஸ் சாறு, சிறிது ஈஸ்ட், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மூன்றையும் கலந்து, 20 நிமிடம் முகத்தில் தடவி, மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனால், முகச் சுருக்கம் மறைந்து,முகம் பொலிவுடன் இருக்கும்.

* சுண்ணாம்பை தண்ணீர் கலந்து காலையில் தடவினால், மாலைக்குள் முகப்பரு மறைந்து விடும்.

* வெள்ளை முள்ளங்கி சாறுடன், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் தக்காளி சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, மிதமான சுடுநீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர, வெப்பத்தால் உண்டாகும் தவிட்டு நிறப் புள்ளி மறையும்.

* உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம்.

* முகம் மிருதுவாகவும், ரோஸ் நிறத்துடனும் இருக்க ரோஜாப் பூ இதழ்களை அரைத்து, அதோடு பால் , பச்சை பயிறு மாவு, மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளக்கும்.

* கரும்புள்ளி உள்ள இடத்தில்,பச்சை பயிருடன் தயிர் சேர்த்து தடவ வேண்டும். அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்து பின் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.* கடலை மாவு ஆறு டீஸ்பூன், பாலாடை இரண்டு டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு 10 சொட்டு, கிளிசரின் ஒரு டீஸ்பூன் கலந்து தினம் ஒருமுறை முகம், கை, கழுத்து பகுதிகளில், தடவினால் வெயிலினால் ஏற்படும் கருமையை போக்கலாம். பப்பாளி கூழுடன் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தாலும் நல்லது.

* வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.

* ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி உதிர்தல், நரைமுடி குறையும், செம்பட்டை முடி கருமையாகும், பொடுகு நீங்கும்.

* நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்திக் காட்டலாம். பேலன்ஸ்டு டயட் என்பது மிக மிக அவசியம். வைட்டமின்கள், தாதுப் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காய்கறி, பழங்களையும் அதிகளவில் சாப்பிட வேண்டும்

ஆண்களுக்கான அழகு குறிப்புகள்

பெண்களை விட ஆண்கள் அழகின் மீது அதிகமாக கவனம் செலுத்துவதில்லை.. அது ஏன் என்றும் புரியவில்லை. .(இயற்கையிலே அவங்க அழகாக இருப்பதாலா?)
ஆனால் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக வெளியுலக தொடர்பு இருக்கு. அவர்கள் தான் வெயில், மழை,தூசியிலும் செல்வார்கள். ஆனால் அவங்க அழகின் மீது அக்கரை காட்டமாட்டாங்க.ஆண்கள் ஆடைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் முகத்துக்கு கொடுப்பதில்லை எனபது தான் வருத்தம்
ஆண்களும் அழகுக்குனு நேரம் ஓதுக்கி உடலை பாதுகாத்துக்கொள்ளனும். வீட்டில் எதுவும் செய்ய முடியவில்லை என்றால் மாதம் ஒரு முறை ப்யூட்டி பார்லர் போகனும்.
வீட்டிலே செய்யும் சில சிம்பிளான அழகு குறிப்புகள் சொல்கிறேன்.. வாரம் ஒரு முறையாவது செய்யுங்கள்..

முக அழகுக்கு:
பொதுவாக ஆண்கள் வேலைநிமித்தமாக அதிகமாக வெயிலில் சுற்றிதிரிவார்கள். வீட்டுக்கு வந்தவுடன் முகத்தை நன்றாக குளிர்ந்த நீரில் அலசவும். இன்னும் கொஞ்சம் டைமிருந்தால் ஐஸ் கட்டியினை ஒரு துணியில் போட்டு முகத்தில் ஓத்தடம் கொடுக்கவும். இதனால் முகம் தெளிவடையும். இதனை தினமும் செய்யுங்கள்.

சில ஆண்களுக்கு முகம் உலர்ந்து சொரசொரப்பாக இருக்கும் அவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை( மூக்கை மூடிக்கொள்ளவும்) எடுத்து அதில் பாலாடையும், பன்னீரையும் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவிடவும். பிறகு இளஞ்சூடான வெந்நீரில் அலசினால் சில நாட்களில் தோல் மிருதுவாக மாறி பளபளப்பாக மாறிவிடும். இது மாசம் 2 முறை செய்யவும்.

தினமும் பசும் பாலில் ஏடு எடுத்து முகம் முழுவது நன்கு அழுத்தி தேய்து ஊற வைக்கவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் அலசவும்.
முகத்தின் கரும்புள்ளிகள் மாற சிறிது எலுமிச்சை சாறுடன் தயிரை சமமாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசவும். கருபுள்ளிகள் மாயமாக மறைந்துவிடும்.

உதடுக்கு:
சில ஆண்கள் சிகெரட் குடித்து உதடுகள் கருமையாக இருக்கும் அதனை போக்க பீட்ரூட் சாறு, அல்லது புதினா இலை சாறு, அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிகப்பாக மாறிவிடும். (தொடர்ந்து சிகெரட் குடிப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் பயனில்லை)

பற்களுக்கு:
எலுமிச்சை சாறு + உப்பு கலந்து அல்லது புதினா இலையை காய வைத்து அதனை தூளாக்கி இந்த தூளில் பல் தேய்த்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும்.

கூந்தலுக்கு;

தலைமுடி நன்றாக கருகருவென்று வளர்வதற்கு நல்லெண்ணெய், விளக்கெண்னெய், தேங்காய் எண்ணெய் மூன்றும் சமமாக எடுத்து தலைக்கு தேய்த்து ஊரிய பின்பு குளிக்க வேண்டும்

வீட்டில் பெண்களிடம் சொல்லி மருதாணி இலை, கறிவேப்பிலை சிறிது செம்பருத்தி பூ,இதனை காய வைத்து நன்றாக அறைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு தலைக்கு தேய்க்கலாம்.

உணவில் அதிகமாக கீரை, மற்றும் பச்சை காற்கறிகளை அதிகம் சேர்க்கவும்

இளம் நரை வந்தவர்கள் ஷாம்பு போடுவதை தவிற்க்கவும். கூந்தலை ட்ரையாக வைக்க வேண்டாம். சுத்தமான தேங்காய் எண்ணெய் தடவவும்.

முட்டையில் வெள்ளை கருவை தலைக்கு தேய்த்து குளிக்கலாம்

ஹேர் ட்ரை, ஸ்பிரே, ஜெல், ஹேர் கலரிங், ஸ்பார்கல் போன்றவையினை கூந்தலுக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம். 22



ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். இந்த டிப்ஸ் ஏற்கனவே நான் தமிழ்குடும்பம்.காமில் கொடுத்தது தான்

ஆடைகளைத் தேர்வு செய்யும்போது, நீங்கள் போகவிருக்கும் நிகழ்ச்சியைப் பற்றி மனதில் கொள்ள வேண்டும்.

நண்பர்களுடம் போவதாக இருந்தால் நார்மல் உடையே போதுமானது

நெருங்கிய உறவினர் விட்டு திருமண நிகழ்ச்சிக்கு போகும் போது சேர்வானி டிரேஸ் நன்றாக இருக்கும்

சின்ன சின்ன நிகழ்ச்சிக்கு ஜீன்ஸ் அணிந்துகொண்டு அதற்குப் பொருத்தமாக வெள்ளை குர்தா அணிந்தால்,கேஷுவலாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும்.

இன்னும் தென்னிந்திய அழகு கிடைக்க, பட்டுவேட்டியும் ஜிப்பாவும் நல்ல காம்பினேஷன். அழகாக இருக்கும்

ஆடைகள் வாங்கும் போழுது வெள்ளை, கறுப்பு, க்ரே, லைட்பிங்க், லைட்ப்ளூ லைட் எல்லோ, போன்ற நிறங்கள் ஷர்ட்களுக்கு நல்லாய் இருக்கும். அவர்களின் நிறத்துக்கு ஏற்றதை போல் தேர்வு செய்யவும்..

உள்ளாடைகள் தேர்வு செய்யும் பொழுதும் அதிக கவனம் தேவை அதிக இருக்கமான உள்ளாடைகள் சிலருக்கு அலர்ஜியினை ஏற்படுத்தும். காட்டன் உள்ளாடைகளை எப்பொழுதும் நல்லது.







கல்லுரிக்கு போகும் ஆனா நீங்கள்

டீசுஷர்ட் போட்டு (காலர் இல்லாதது) அதற்குக் கான்ட்ராஸ்ட்டான கலரில் வெளியே ஒரு ஷர்ட் போட்டுக் கொள்ளலாம். இதுதான் இப்ப ஃபேஷன். உடைக்குப் பொருத்தமாக ஜீன்ஸ் மெட்டீரியலில் வரக்கூடிய காலணிகள் மற்றும் ஜூட் காலணிகள் போட்டடால், அசத்தலாக இருக்கும்.

இது போல் ஃபேஷன் என்று காது, கழுத்தில் எலும்புக்கூடு, மண்டை ஓடை, சைக்கள் செயின் போட வேண்டாம். இளம் இரத்தத்துக்கு அழகாக தெரிவது உங்களை பார்க்கும் பெண்களுக்கு பிடிக்காது.

வெளி அழகு 50% உள் அழகு 50% இருக்கனும், அப்பதான் நீங்கள் அழகாக மற்றவர்களுக்கு தெரிவிங்க.

உடலின் அழகை மேலும் மெருகூட்டுவதற்கு மனதை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் நிஜமான புன்னைகை எப்பொழுதும் முகத்தில் இருக்கனும், பிறர் மீது அதிக கோபமோ, பொறாமை படுவது உங்களின் முக அழகை கொடுக்கும்.. எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதே அழகிற்கு மூலதனம் என்பதனை மறந்துவிடாதிங்க...